புஸல்லாவை பகுதியில் பற்றி எரிந்தது தேயிலை தொழிற்சாலை!

புஸல்லாவை வகுவப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் (ரைலன்ட்) இன்றிரவு (26) ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்துள்ளது.

தொழிற்சாலைக்குள் இருந்த இயந்திரங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன. எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related Articles

Latest Articles