நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு வழங்கப்படும்.
அத்துடன், வடமேல் மாகாணத்துக்கான அலுவலகம் குருணாகலில் செயற்படும் எனவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஆட்பதிவு திணைக்களத்தின் வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்படி தகவலையும் வெளியிட்டார்.
