‘ பெருந்தோட்டப்பகுதி மக்களுக்கு கோதுமைமா நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிலுந்தாலும், அவ்வாறு கோதுமை மா வழங்கப்படவில்லை.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெ ற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண விலையில் கோதுமை மா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் தமக்கு மா வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவ இல்லை என நிதி அமைச்சரும் குறிப்பிடுகின்றார். இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறுகின்றார்.
