பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு தயங்க வேண்டாம்

அங்கீகரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியை, தங்களது பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு தயங்க வேண்டாம் – இலங்கை மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகளில், பெருமளவான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, அதன் சாதக மற்றும் பாதுகாப்புத் தன்மை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டதன் பின்னரே இலங்கை அந்த தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றது.

இந்நிலையில், பெற்றோர்கள் என்ற அடிப்படையில், பிள்ளைகளை தடுப்பூசி ஏற்றத்திற்கு உட்படுத்த முன்வர வேண்டும். என இன்று(24) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles