இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஒரு மில்லியன் ரென்மின்பி (RMB)யை நிவாரண உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கவுள்ளது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.
இந்த உதவியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் சர்வதேச பிரிவு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவாரண உதவியின் அமெரிக்க டொலர் மதிப்பு சுமார் 142,930 டொலர்கள் ஆகும்.
