கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைசர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
” பைசர் தடுப்பூசியை ஏற்றும் பொறுப்பை இராணுவத்துக்கு வழங்கும் முடிவை யார் எடுத்தது, இதில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான தன்மை என்ன?” என்று வைத்தியர் நவீந்த டி சொய்சா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
இனிவரும் காலங்களில் பைசர் தடுப்பூசி இராணுவ தலைமையகத்தில், உரிய தரப்பிற்கு செலுத்தப்படும் என இராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.