பொகவந்தலாவ கெசல்கமு ஓயா வனப்பகுதியான மோரா தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளார்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு நேற்று மாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று, வனப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இருவரை கைது செய்ததுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்