பொகவந்தலாவயில் மேலும் ஐவருக்கு கொரோனா!

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் கீழ்பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (01.12.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 09, 13, 34, 65 மற்றும் 75 வயதுடைய நபர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் கீழ்பிரிவில் கடந்த 28 ஆம் திகதி கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அறுவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles