பாடசாலை மாணவரொருவரை தரையில் தூக்கி அடித்ததாக கூறப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை கைதுசெய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 5 இல் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு மாணவர்களையும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் எச்சரித்து, கண்டித்து, ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தனது மகனை தாக்கிய மாணவனின் வீட்டுக்குசென்ற தந்தை, மாணவனை தாக்கியுள்ளார்.இதனால் காயமடைந்த மாணவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்தே தரையில் தூக்கி அடித்தார் எனக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்