பொன்சேகா சொற்போர்: பதிலடி கொடுக்க வேண்டியதில்லை என்கிறது மொட்டு கட்சி!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்கு தெரியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ராஜபக்சக்களுக்கு எதிராக சரத்பொன்சேகா தற்போது கடும் சொற்போர் தொடுத்துவருகின்றார். இறுதிப்போரில் நடந்த சம்பவங்களையும் வெளிப்படுத்தி வருகின்றார். வெள்ளைக்கொடி விவகாரம் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தெற்கு அரசியலில் பெரும் அரசியல் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பொன்சேகாவின் அறிவிப்புகள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மொட்டு கட்சி செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles