போதைப்பொருளுடன் பண்டாரவளையில் ஐவர் கைது!

பண்டாரவளை நகரில் 4700 மில்லி கிராம் ஹொரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்ப்பட்டவர்கள் 25 மற்றும் 30 வயதுக்கும் இடைப்பட்ட பண்டாரவளை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

தியத்தலாவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் போது மற்றைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles