போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார, அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அமித பண்டார காவல்துறையினால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், பதவியில் இருந்தும் நீக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.