போதை மாத்திரைகளுடன் பசறையில் இளைஞன் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன்வே பகுதியில் 28 போதை மாத்திரைகளும் 800 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் 28 வயதுடைய நபர் ஒருவர் பசறை பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வன்வே பகுதியில் சோதனையை மேற்கொண்ட போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles