புதிய யுகத்துக்கான “சுதந்திரம்”!

சுதந்திர தின நிகழ்வென்பது மக்களுக்கானது. எனவே, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சர் (கலாநிதி) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தனித்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது.

தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இம்முறை சுதந்திர தின விழா இடம்பெறவுள்ளது. அத்தியாவசியமானவற்றிக்கு மாத்திரம் வரையறுத்து, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைத்து, இம்முறை சுதந்திர தின விழா இடம் பெறவுள்ளதுடன், சாதாரண பொதுமக்கள் சுதந்திர தின வைபவத்தை பார்ப்பதற்கு அதிகமாக இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

சுதந்திரத்தை வெற்றி கொள்வதற்காக அர்ப்பணிப்புச் செய்த பல்லாயிரக்கணக்கான தேசப்பற்றாளர்கள் காணப்படுவதாகவும் எனினும், பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக அந்த முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோமா? என்ற பிரச்சினை முன் உள்ள கேள்வி என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றும் மற்றும் புதிய அணுகுமுறை ஒன்றும் இந்த நாட்டிற்கு அவசியமாவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதிகமான மக்கள் கடந்த சந்தர்ப்பத்தில் இதற்காகவே அணி திறண்டார்கள் என்றும், அவ்வாற் அணி திறண்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காகவே இம்முறை சுதந்திர தின விழா இடம் பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் சமமான கவனிப்பு சிங்கள, தமிழ், முஸ்லிம் உட்பட சகல சமயத்தவர்களுக்கும் சகோதரத்துவத்துடன் செயற்படுகின்ற கனவை நனவாக்குவதற்கு இம்முறை 77 ஆவது சுதந்திர தின விழாவை பயன்படுத்துவதாக அமைச்சர் மேலும் விவரித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles