மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களுக்கு இடமளிக்கப்படாது: பிரதமர் திட்டவட்டம்!

“ அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது.” என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசுரிய தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

“ அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்கான பொதுவான திட்டமொன்றை முன்வைத்து, அதற்கேற்பச் செயற்பட வேண்டும்.

கொழும்பு மாவட்டத்தினுள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவது குறித்து நாம் கலந்துரையாடி வருகிறோம்” எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles