மக்கள் நிம்மதியாக வாழட்டும்: ரணிலே நாட்டை ஆளட்டும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் எதிர்ப்பார்ப்பாகும். செப்டம்பர் 21 ஆம் திகதி அந்த எதிர்பார்ப்பு ஈடேறும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, நுவரெலியா மாநகரில் 15.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே மருதபாண்டி ராமேஷ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ நாடு நெருக்கடியில் இருந்தபோது எதிரணியில் இருந்தவர்களெல்லாம் ஆட்சியை பொறுப்பேற்காது பயந்தோடினர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்காக முன்வந்து சவாலை ஏற்றார். குறுகிய காலப்பகுதிக்குள் அவர் நாட்டை மீட்டெடுத்துள்ளார்.

மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் சேவையை வழங்கியுள்ளார். இன்று வரிசைகள் இல்லை. அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் எதிர்க்கட்சிகளால் கூட சுதந்திரமாக அரசியல் செய்யமுடிகின்றது. மின்வெட்டு இல்லை, எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை.

எனவேதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து ஆள வேண்டும் என வடக்க, கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு என நாட்டில் வாழும் அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றனர். அந்த எதிர்ப்பார்ப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி நிறைவேறும். 22 ஆம் திகதி ஆகும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக இருப்பார். மீண்டும் ரணில், வேண்டும் ரணில் என நாம் பிரச்சாரம் செய்துவருகின்றோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles