மக்கள் பேராதரவுடன் ரணிலிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்!

நாடு தற்போது பயணிக்கும் பாதையை மாற்ற முற்பட்டால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டு மக்கள் எவரும் பட்டினியால் வாடாமல் வாழக்கூடிய சூழ்நிலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்குவார். எனவே, மக்களின் அமோக ஆணையுடன் அவரிடம் இவ்வருடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.

தற்போது பயணிக்கும் பாதையை மாற்ற முற்பட்டால் அழுத்தங்கள், நெருக்கடிகள் ஏற்படும். தனி ஒரு ஆளாக முழு நாட்டையும் பாதுகாக்ககூடிய ஆளுமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது.” – என்றார் வஜிர அபேவர்தன.

Related Articles

Latest Articles