‘மண்சரிவு அபாயத்திலிருந்து மீள மாலையோடு காத்திருந்த மக்களை ஏமாற்றிய ஜீவன்’

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட டயகம நகரிலிருந்து சுமார் 7 கிலோமீற்றர் தொலைவிலேயே நட்போன் தோட்டம் அமைந்துள்ளது.

மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்துக்கு செல்லும் பாதையும் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் டயகம பகுதியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நட்போன் கிராமம் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

தோட்டத்துக்கு மேல்பகுதியில் உள்ள மலை சரியக்கூடிய அபாயம் இருப்பதாகவும், அவ்வாறு நடந்தால் முழு தோட்டமுமே மண்ணுக்குள் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது எனவும் தோட்ட மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் தம்மை சந்தித்து

கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருவதாக உறுதியளித்திருந்தார். எனினும், அவர் வரவில்லை. ஆனால் வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளார் என தோட்ட மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
” நாம் அரிசி, பருப்பு கேட்கவில்லை. பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறே கோருகின்றோம்.” – எனவும் பரிதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜீவனை வரவேற்று, அவரிடம் குறைகளை எடுத்துரைப்பதற்கு ஆவலாக காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரமுடியும். கீழுள்ள தோட்டங்களுக்கு வந்த ஜீவன், ஏன் மேல் தோட்டத்துக்கு வரவில்லை எனவும் கேள்வி எழுப்பிள்ளனர் தோட்ட மக்கள்.

Related Articles

Latest Articles