மண்ணுக்குள் புதையுண்ட நால்வரும் சடலமாக மீட்பு – மாவனல்லையில் சோகம்

மாவனல்லை, தெவனகல பகுதியில் மண்ணுக்குள் புதையுண்டு காணாமல்போயிருந்த மேலும் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

தந்தை, தாய் மற்றும் மகனின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

இப்பகுதியிலுள்ள வீடொன்றின்மீது இன்று மண்மேடு சரிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த நால்வர் மண்ணுக்குள் புதையுண்டனர். இதனையடுத்து இராணுவத்தின் உதவியுடன் மீட்பு பணி முன்னெடுக்கப்பட்டது.

யுவதியொருவரின் சடலம் காலையில் மீட்கப்பட்ட நிலையிலேயே தற்போது ஏனையோரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles