மாவனல்லை, அளுத்நுவர மாணிக்காவ பகுதியில் கட்டுமான பணியின்போது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று முற்பகல் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதையுண்டனர். இதனையடுத்து மீட்பு நடவடிக்கை இடம்பெற்றது. கடும் போராட்டத்துக்கு மத்தியில் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.