மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை தணிக்க பிரதமர் மோடி முயற்சி!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்குரிய முயற்சியில் இந்தியா களமிறங்கியுள்ளது.

இதற்கமைய அமைதி முயற்சி குறித்து பிரான்ஸ், மலேசியா, ஓமான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தியுள்ளார்.

முதலில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
“ மத்திய கிழக்கு நிலவரம் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியுடன் கலந்து பேசினேன். அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும்.

போரை நிறுத்த அமைதிப் பேச்சு , இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

அங்கு அமைதியை ஏற்படுத்த நானும், பிரான்ஸ் ஜனாதிபதியும் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் உடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

ஓமான் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடனும் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வலைதளப் பதிவில், ‘ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

ஓமானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக சகோதரர் ஹைதம் பின் தாரிக்குக்கு நன்றி தெரிவித்தேன்.

மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய இந்தியாவுடன் ஓமனும் உறுதுணையாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் மோடியின் சமரச முயற்சி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுடன் இந்தியா நல்லுறவை பேணி வருகிறது.

இதன்படி இரு தரப்பிலும் பிரதமர் மோடியால் மட்டுமே இராஜதந்திர பேச்சு நடத்த முடியும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles