தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரி குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக மரத்தில் ஏறிப் போராட்டம் நடத்தியமையால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம் பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதி யைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 30) வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள மரத்தில் ஏறி கீழே இறங்கமால் போராட்டத்தில் அவைரச் சேர்த்து வைக்குமாறே இவ்வாறு மரத்தில் ஏறி அவர் போராடியிருந்தார்.
அவர் நீண்ட நேரமாக மரத்தில் இருந்து இறங்காமல் இருந்தமையால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொலிஸா ர் மற்றும் ஏனைய தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் மரத்தில் இருந்து கீழே இறங்கிச் சென்றிருந்தார்.
