மன்னார் – பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
