அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை – மன்றாசி நகரில் உள்ள ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து பணம் களவாட முயற்சி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்றாசி நகரில் பாலத்திற்கு அருகாமையில் உள்ள (ஏ.ரி.எம் இயந்திரம்) நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இன்று 13 ம் திகதி டொரின்டன் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
குறித்த இயந்திரத்தின் பாதுக்காப்பு அறையின் கதவு உடைக்கப்பட்ட போதிலும் பணத்தை எடுக்க முடியாமல்போயுள்ளது.
இயந்திர பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிரிவி கண்காணிப்பு கமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன எனவும், சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் உதவியுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
