கால்பந்து ஜாம்பவான் மரடோனா உயிரிழந்தார்

ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.  (வயது – 60)

அணியின் சிறந்த வீரர், தலைவர், பயிற்றுவிப்பாளர் என கால்பந்து உலகில் தனது திறமைகளை டீகோ மரடோனா வெளிப்படுத்தியிருந்தார்.

டீகோ மரடோனாவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து இந்த மாத முற்பகுதியில் ஆர்ஜன்டீன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வெளியேறியிருந்தார்.

1986ஆம் ஆண்டு ஆர்ஜன்டீன அணி உலகக் கால்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றுவதில் மரடோனா அணிக்குத் தலைமைதாங்கி, பெரும் பங்கு வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரடோனாவின் மரணம் உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் அர்ஜென்டினா கால்பந்துச் சங்கம் தங்கள் வரலாற்று நாயகன் காலமானதற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

மரடோனாவின் கால்பந்து சாகசங்கள்


இறுதி காலத்தில் மரடோனா

Related Articles

Latest Articles