கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை பல்லேகம பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
54 வயதுடைய குறித்த நபர் பொக்கொல்லயிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.
கொழும்பு, மருதானை பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இவர் கடந்த 10 ஆம் திகதி பல்லேகம பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். அவரிடம் கடந்த 20 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நேற்று (23) பிரிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.










