மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், ஆராத்யா

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு சரியாகி அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 11ம் தேதி மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அமிதாப் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அமிதாபின் மனைவி ஜெயா பச்சனுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.

ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 17ம் தேதி இரவு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பது குறித்து அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தன் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு குணமாகி அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் அபிஷேக் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் இன்னும் முற்றிலும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

அமிதாப் வீட்டில் வேலை செய்து வரும் சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. முன்னதாக அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அவர்களுக்கு சொந்தமான 4 பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது அந்த சீல் நீக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் வீடு திரும்பிய செய்தி அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்ததாக அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக்கும் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அமிதாப் பச்சன் குடும்பத்தார் குணமடைந்து வீடு திரும்பும் வரை கொல்கத்தாவில் இருக்கும் ரசிகர்கள் யாகம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 77 வயதாகும் அமிதாப் பச்சன் தைரியமாக இருப்பதை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பயப்படாமல் இருப்பது தான் முக்கியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான் அமிதாப் பச்சனின் தைரியம் ரசிகர்களை வியக்க வைக்கிறது.

மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் பச்சன் தன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார். இது போன்ற நேரத்தில் தன் தந்தையை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்து வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார் அமிதாப்.

அவர் அடிக்கடி இப்படி தன் உடல்நலம் பற்றி அப்டேட் கொடுப்பது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

– நன்றி சமயம்.கொம்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles