மலையகத்தில் விரைவில் கட்சிதாவலொன்று இடம்பெறவுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனவும் நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்தே இத்தாவல் இடம்பெறுகின்றது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் இருவரும் இதனுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
நுவரெலியாவில் உள்ள நட்சத்திர விடுதியொன்றிலும் அதன்பின்னர் கொழும்பிலுள்ள விடுதியொன்றிலும் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
