இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகள் சந்தோஷ் ஜா வை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது இலங்கையின் அபிவிருத்திக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.