மலையக தமிழ் தேசியத்துக்கு, “தாயகம்” மலையக பூமிதான்!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

மலையக தமிழ் தேசியத்துக்கு, “தாயகம்” மலையக பூமிதான்.
ஆனால், இதை நாமதான் சொல்லி திரியறோம். சிங்கள தேசம் அதை ஏற்கலை.

நுவரெலியா, கண்டி, மாத்தளை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை, அவிசாவளை, குருநாகலை, ஆகிய பிரதேச தோட்டங்களில் இருந்து, உழைச்சு, மண்ணுக்குள்ள போங்க. ஆனால், காணி எல்லாம் தர மாட்டோம்!

நுவரெலியா தவிர, ஏனைய கீழ் நாட்டு பெருந்தோட்ட காணிகளை, அயல் சிங்கள கிராமத்தவருக்கு பிரிச்சு கொடுப்போம். ஆனால், உங்களுக்கு தர மாட்டோம்!

இவைதானே இங்க நிலைபாடு?

இதான் மலையக காணியுரிமை பிரச்சினை..!

இதை புரிந்து கொள்ள முடியாதவர்கள், தற்குறிகள் அல்லது வறட்டுவாதிகள் ஆவர்.

மாண்புமிகு மலையக தமிழர், மலையக மண்ணில் வாழணும்னு-தான் நானும் விரும்பறேன்.

ஆனால், பாதுகாப்பான காணி தர மறுத்தால் என்ன செய்வது?
ஆகவேதான், மாற்று யோசனையா, “வட-கிழக்கில் குடியேறி வாழ விருப்பமா?” என நான் சந்தித்த மலையுச்சியில் வாழும் மக்களை கேட்டேன். எனக்கே ஆச்சரியம், அவர்கள் உடனே உடன்-பட்டு கோஷம் போட்டார்கள்!

புலம்-பெயர்வால், வட-கிழக்கில் இன்று காலியாகி, காடாகி வரும் காணிகளை, உரிமையாளர், மனமுவந்து தந்தால் இது சாத்திய படலாம். அவ்வளவுதான்!

என்னில் குற்றம் காண்பவர்கள், தோழரின் பக்கத்தில், இருக்கும் மாண்புமிகு மலையக நண்பர்கள், தங்கள் “தோழரிடம்” சொல்லி, “பாதுகாப்பான காணிகளை”, மலையக மக்களுக்கு வாங்கி தாங்களே!

“இடம், கொஹேத தியன்னே, மனோ?” (காணி, எங்கே இருக்கிறது, மனோ?) என தோழர், என்னிடமே திருப்பி கேட்டார். ஆகவே, அவருக்கு இந்த காணி விஷயத்தில் புரிதல் இல்லை.
ஆகவே, உண்மை #NPP நண்பர்கள் (தற்குறிகள் இல்லை!) அவருக்கு விளக்கி கூறனும்.

வட-கிழக்கில், மலையக தமிழர் குடியேறுவதை, சிங்கள தேசம், அரசியல் நோக்கில் விரும்பாட்டி, நமக்கு பாதுகாப்பான காணிய இங்கே தரட்டுமே! நானும், அதானே கேட்கறேன்.

நீங்க காணியும் தர மாட்டீங்க! போகவும் விட மாட்டிங்க! இன்னொரு 200 வருஷங்கள், இப்படி மண்-சரிவு மலைகளில் இருந்து, உழைத்து, ஓடாகி, மண்ணுக்கு உள்ளே மடியனும் என்பதா, உங்கள் வறட்டுவாத தீர்வு? தற்குறி தீர்வு?

Related Articles

Latest Articles