மலையக மக்களுக்கான அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் முழு ஆதரவு!

” மலையக மக்கள் சார்பான அனைத்து வேலைத்திட்டங்களையும் நாங்கள் ஆதரிப்போம்.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

” 1948 ஆம் ஆண்டில் வாக்குரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட போது, மலையக தமிழர்களுக்கு வாக்குரிமையை கொடுப்பதற்கு இரண்டு தலைமுறைகள் போக வேண்டியதை போன்றிருந்தது. நடைமுறை ரீதியில் அவர்கள் பிரஜாவுரிமையை இழந்தவர்களாக இருந்தனர். இந்திய பாகிஸ்தான் சட்டத்தால் அந்த காலத்தில் 85 வீதமான மலையக தமிழர்கள் பிரஜாவுரிமையை இழந்தனர்.
இவர்கள் அரசற்றவர்களாக இருந்தனர்.

ஶ்ரீமா – சாத்திரி சட்டத்தின் கீழ் இவர்களில் பலர் இந்தியா சென்றனர். இலங்கையில் தான் அவர்கள் பிறந்தவர்களாக இருந்தனர். அவர்களை வெளியே அனுப்பியது தவறு. எவ்வாறாயினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக நாங்கள் அனைத்து நகர்வுகளிலும் மலையக மக்களுக்கான அனைத்து பணிகளிலும் ஆதரவளித்துள்ளோம். எந்த பக்கத்தில் இருந்தாலும் தொடர்ந்தும் நாங்கள் இந்த மக்களுக்காகவும் செயற்படுவோம் என்றார்.

Related Articles

Latest Articles