மலையக மக்களுக்கு பட்ஜட்டில் நிவாரணம் வேண்டும்

நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் பெருந்தோட்ட சமூகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000 ரூபா சம்பளம் கூட முறையாக கிடைப்பதில்லை. எனவே, வரவு – செலவுத் திட்டத்தில் எமது மக்களுக்கு விசேட நிவாரணம் அல்லது வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டாளர் டி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

மஸ்கெலியாவில் இன்று (14.10.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினம் நினைவு கூரப்படுகின்றது. இந்நிலையில் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல மலையகத்திலுள்ள வளங்கள் சுரண்டப்படுகின்றன. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் அதன்மூலம் விடிவு ஏற்படவில்லை. தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சம்பளத்துக்கு 20 கிலோ கொழுந்து பறித்தாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் நாட்டிலே பொருட்களின் விலைகள் வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளன. நாட்டிலுள்ள மக்களுக்கு இதனால் பாதிப்பு என்றபோதிலும் பெருந்தோட்ட சமூகத்துக்கே அதிக தாக்கம் ஏற்படும். வாழ்க்கைச்சுமை அதிகரிக்கும். எனவே, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட நிவாரணம் அல்லது வாழ்வாதார கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். இதற்கான யோசனையை நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்.

அதேவேளை, இயற்கை விவசாயத்தையே நாம் ஊக்குவிக்கின்றோம். இரசாயனம் இல்லாத நிலைமை உருவாக வேண்டும். கியூபாவை உதாரணமாக எடுத்து செயற்படவேண்டும். ‘ -என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles