மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகஸ்தனை தோட்ட மேற்பிரிவில் இன்று (05) சிறுத்தைக்குட்டியொன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 வயது மதிக்கதக்க குறித்த சிறுத்தை, தொழிலாளர் ஒருவரின் பண்ணையில் இருந்தவேளையிலேயே உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.
நல்லதண்ணி வனபாதுகாப்பு அதிகாரிகளிடம் சிறுத்தைக்குட்டி கையளிக்கப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்