மஸ்கெலியா நோக்கிசென்ற லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஹட்டன் – பொகவந்தலா பிரதான வீதியில், தியசிரிகம பகுதியில் இன்று காலை லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. பொருட்களுக்கு தேசம் ஏற்பட்டிருந்தாலும், எவ்வித காயமுமின்றி சாரதி உயிர் தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

படம் – கழுகுப்பார்வை இணையம் (நன்றி)

Related Articles

Latest Articles