” துட்டகைமுனு மன்னருக்கு பிறகு இந்நாட்டில் உருவான சிறந்த தலைவரே மஹிந்த ராஜபக்ச. அவரிடம் 6 மாதங்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.”- என்று முன்னாள் அமைச்சர் மேர்வில் சில்வா தெரிவித்துள்ளார்.
” மஹிந்த ராஜபக்சவை நான் மதிக்கின்றேன். அவர் சிறந்த தலைவர். போரை முடித்தவர். பல அபிவிருத்திகளை செய்துள்ளார். ஆனால் தற்போதைய அரசின் செயற்பாடுகள் அவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. பெயரளவில் மட்டுமே மஹிந்த பிரதமராக இருக்கின்றார். அவரிடம் நாட்டை 6 மாதங்களுக்கு ஒப்படைக்கவும். மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி இதற்கான ஏற்பாடுகளை செய்யவும்.
நான் இன்று மஹிந்த ராஜபக்சவுடன் இருந்திருந்தால் அவரை அழைத்துக்கொண்டு அரசிலிருந்து வெளியேறி இருப்பேன். மஹிந்தவை சூழ இன்று மோசடியான சிலரே உள்ளனர். அவர்கள் இருக்கும்வரை மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கமாட்டேன்.”- என்றும் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.