கோட்டாகோகம மற்றும் மைனாகோகமவில் இடம்பெற்ற அமைதிப் போராட்டங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கா, முன்னாள் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் இன்று(11) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளரின் மேற்பார்வையில், 2 பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
