இந்திய அணி தலைவர் ரோகித் சர்மா, 2008 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரில் அறிமுகம் ஆனார். தற்போது அவர் 7ஆ வது ஆசிய கோப்பையில் ஆடி வருகிறார். இதன் மூலம் 7 ஆசிய கோப்பையில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
டோனி, டெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பையில் ஆடி உள்ளனர்.
ரோகித் சர்மா ஆசிய கோப்பையில் 28 ஆட்டத்தில் விளையாடி இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தனவை சமன் செய்தார். அவர் 26 இன்னிங்கில் 883 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் 3499 ரன் எடுத்துள்ளார். மார்ட்டின் குப்தில் (நியூசிலாந்து) 3497 ரன்னுடன் 2-வது இடத்திலும், விராட்கோலி 3343 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.










