‘மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும்’

புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும். அதனைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கக்கூடாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (17.12.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் உண்பதற்காக மட்டுமே வாய்திறக்கவேண்டும், அவர்களுக்கு ஒருபோதும் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்ற மமதையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகள், அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான சதித்திட்டங்களை தீட்டிவருகின்றனர். இதன்ஓர் அங்கமாகவே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது, அம்முறைமை நீக்கப்படவேண்டும் என மீண்டும் கோஷமெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

புதியதொரு அரசியலமைப்பு இயற்றப்படவுள்ள சூழ்நிலையில், மாகாணசபை முறைமைக்கு எதிராக அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபை முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது.

மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், மாகாணசபைகள் முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அவர்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக – ஒடுக்குவதற்காக அரசாங்கம், திட்டமிட்ட அடிப்படையில் இனவாதிகளை களமிறங்கியுள்ளதா என்ற வினாவும் எழுகின்றது.

அதேவேளை, தம்வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. பெரும்பான்மையின மக்களை இயக்கக்கூடிய இனவாத சக்திகள் உள்ளன என்ற நம்பிக்கையில் அரசாங்கம், மாகாணசபை முறைமையில் கைவைக்கும் பட்சத்தில் அது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இராஜதந்திர மட்டத்திலான நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிவரும்.

எனவே, மாகாணசபை முறைமையில் கூடிய விரைவில் அரசாங்கம் நடத்தவேண்டும். அதன்பின்னர் புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமையை பலப்படுத்தவேண்டும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles