மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் சகிதமே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை முதல் தளர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு இவ்வாறு திறக்கப்பட்டாலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தனர்.
