மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு


திருகோணமலை – ஆயிலியடி பகுதியில் மாமரத்தில் இருந்து வீழ்ந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆயிலியடி பகுதியில் மாங்காய் ஆய்வதற்காக மரத்தில் ஏறியபோது மரத்தின் கிளை உடைந்ததில் மரத்தில் இருந்து சிறுமி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த  12 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டதையடுத்து சிறுமியின் சடலத்தைச் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும், சம்பவம் தொடர்பில் வான்எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles