மாமியாரை படுகொலை செய்த மருமகள்! நானுஓயாவில் பயங்கரம்!!

மாமியாரை கடுமையாகத் தாக்கி – 20 அடி பள்ளத்தில் தள்ளி மருமகள் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் நேற்று (01) நானுஓயா, சமர்செட் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

73 வயதுடைய வயோதிபப் பெண்ணே, 23 வயதுடைய மருமகளால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாகமாறி, இறுதியில் கொலையில் சென்று முடிவடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்தவரின் மகன், வாய்பேசமுடியாதவரெனவும் தெரியவருகின்றது.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles