மின்னல் தாக்கியதில் அண்ணனும், தங்கையும் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை, இரத்தோட்டை, வெல்ஹாலயாய பகுதியிலேயே நேற்றிரவு இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான அண்ணனும், 12 வயது தங்கையுமே உயிரிழந்துள்ளனர்.
இரு சடலங்களும் இரத்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, முல்லைத்தீவு – ஐயன்குளம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
ஐயன்குளம் பகுதியில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்களே மின்னல் தாக்கத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் ஐயன்குளம் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயது குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன், 39 வயதான மற்றொருவர் காயமடைந்துள்ளார்.










