தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
” முன்னாயத்த நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
