மியன்மாரில் இடம்பெற்ற சூழ்ச்சி மிக்க அதிகார மாற்றத்தை, ஜனநாயகக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக எதிர்க்கின்றது. அத்துடன், சூழ்ச்சி மிக்க இந்நிகழ்வை மானுட வாழ் உலகத்தவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மியன்மார் தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான கட்சி 80 வீத வெற்றியை பெற்றுக்கொண்டது.
இதன் பிரகாரம் இராணுவ ஆட்சி முடிவுற்றதும் ஏற்பட்ட மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பது ஜனநாயகத்தை விரும்பும் சகல தரப்பினதும் பொறுப்பாகும்.
ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் இல்லாமலாக்குவதற்கும் ஜனநாயகத்தை மதிக்கும் உலகில் அதனை ஒன்றித்த ஏற்பாடுகள் இருக்கும் நிலையில், அந்த சகல ஏற்பாடுகளும் மக்கள் ஆணையால் கற்பிக்கப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
மியன்மாரில் ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதும் ,அரசமைப்பு சார் பாராளுமன்ற முறைமைகளுக்கு சவால் விடுக்காமல் இருப்பதற்கும், வரையறையின்றி மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்களை உடனே நிறுத்துவதற்கும் முன்னேற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்- என்று குறிப்பிட்டுள்ளார்.
