கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்ட நாவலப்பிட்டிய நகரம் முழுவதும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
நகரம் முடக்கப்பட்டுள்ளதால் நேற்றும் இன்றும் நாவலப்பிட்டிய வெறிச்சோடி காணப்பட்டது. இன்று காலை முதல் நகரசபையினரும், சுகாதார பிரிவினரும் இணைந்து தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இதன்படி நாவலப்பிட்டிய நகரம் நாளை (18) முதல் வழமைபோல செயற்படும் என வர்த்தக சங்கத்தின் தெரிவித்தனர்.
அதேவேளை, நாவலப்பிட்டிய பகுதியில் இதுவரை 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.