முடிந்தால் தேர்தலை நடத்தவும் – அரசுக்கு சஜித் மீண்டும் சவால்

துணிவு இருந்தால் மாகாணசபைத் தேர்தலையாவது உடன் நடத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

” மக்கள் எவ்வாறானதொரு ஆணையை வழங்கினாலும் அதனை ஏற்பதற்கு நாம் தயார். எனவே, மக்களின் நிலைப்பாட்டை அறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.

ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல் ஆகியவற்றில் எதையாவது ஒன்றை விரைவில் நடத்தவும்.” எனவும் சஜித் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles