முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா மரிக்கார்?

” நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கே மக்கள் எனக்கு வாக்களித்தனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பற்றி நான் சிந்தித்துகூட பார்க்கவில்லை. எனினும், கட்சி கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் அதற்கு மக்களின் அனுமதி கிடைக்கப்பெற்றால் நான் தயார்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாரா என கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

Latest Articles