பொதுத்தேர்தல் தொடர்பான முதலாவது பெறுபேறு இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுதான் முதலில் வெளியாகும் எனவும், மன்னார் மாவட்டத்திலிருந்தே முதல் முடிவு கிடைக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.