முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மக்கள் பங்கேற்புடன்- உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

முற்பகல் 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் முற்பகல் 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பட்டது.
10.30 க்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுச்சுடரை இறுதி யுத்தத்தில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா ஏற்றினார்.

சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

Related Articles

Latest Articles