குருணாகல், நாரம்மல, வென்னொருவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 23 வயதான யுவதி ஒருவர் பலியாகியுள்ளார்.
சீரற்ற காலநிலையால் நாட்டில் சில பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கேகாலை, ரம்புக்கனை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
